பாடசாலைக் கீதம்

புனித புலோலி தன் மிசன் கல்விக் கூடம்

புவியினில் ஓங்கிட வாழ்க நற்கீதம்

தனிப்புகழ் மேவிட தன்னொளி வீசி

தாரணி போற்றும் தூய நற் கூடம்

(புனித புலோலி)

 

இன மத பேதமின்றி அனைவரும்

இனிதெனக் கூடி ஒற்றுமையாக

கல்வி பயின்றிட  நன் கலை வளர்த்திட

ஆன்ற பெரியோர் அமைத்த நற்கூடம்

(புனித புலோலி)

 

செந்தமிழோடு சிறந்த நற்கலையும்

சீர்மிகு பண்பும் சன்மார்க்க நெறியும்

தாரணி போற்றும் அறநெறி சாற்றும

நன்மக்கள் பலரை நாட்டிற்கு அளித்த

(புனித புலோலி)